திட்டு வாங்கிய பைசர் முஸ்தபா : மக்களை பார்த்து மீண்டும் திட்டிய பைசர் முஸ்தபா

வெள்ள அனர்த்தத்தாப் பாதிக்கப்பட்ட பேலியகொட பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் அப்பிரதேச மக்கள் தமது அபிவிருத்தியைத் தெரிவித்து அமைச்சர்களின் வருகை குறித்து நம்பிக்கையீனத்தை வெளியிட்ட நிலையில் கோபமுற்ற அமைச்சர் பைசர் முஸ்தபா வந்தாலும் திட்டுகிறீர்கள் வராவிட்டாலும் திட்டுகிறீர்கள், நான் வந்தது இதுவே முதற்தடவை எனவே முடிந்த உதவியை செய்ய விடுங்கள் என்று தெரிவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வருகிற யாரும் எவ்வித உதவிகளையும் செய்யவலில்லையெனவும் அதனால் அமைச்சர்களும் அதிகாரிகளும் வருவதில் பயனில்லையெனவும் பிரதேச மக்கள் சிலர் தமது அதிருப்தியைத் தெரிவித்த போது அவர்களை ஆசுவாசப்படுத்த முனைந்த அமைச்சரை நோக்கி தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிடப்பட்ட நிலையிலேயே சற்று குரலை உயர்த்தி அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்ததுடன் தான் உதவி செய்யவே வந்ததாகவும் தன்னால் முடிந்ததை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். 

இதேவேளை, முன்னர் வெல்லம்பிட்டிய பகுதிக்குச் சென்ற அமைச்சர் ஹக்கீம் மற்றும் மேல் மாகாண முதலமைச்சருக்கும் மக்கள் எதிர்ப்பைக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ceylonmoors

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -