பொருளாதார மந்த நிலை காரணமாக வியாபார பாதிப்பினால் கிட்டத்தட்ட 50 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப பின்லாதின் குறுப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஊழியர்கள் பலருக்கு நான்கு மாத சம்பள நிலுவை உள்ளதாகவும் அந்த நிறுவனதகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அந்த நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவு நிலுவைகளை பெற்றுக்கொடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வகையில் மக்கா நகரில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 9 பஸ் வண்டிகளுக்கு தீ மூட்டியுள்ளனர்.