காரைதீவு நிருபர் சகா-
அண்மையில் வெளியான கல்விப்பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் அம்பாறை மாவட்டம் 12 வது இடம் இந்த இடத்தினை பெறுவதற்கு முழுமூச்சாக உழைத்த கல்லூரி கார்மேல் பற்றிமா கல்லூரியே என கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தெரிவித்தார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இவ்வாண்டு சிறந்த பெறுபேறுகளை பெற்ற 33மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், கல்முனை கல்வி வலயத்திற்கு புதிதாக தமிழ் கோட்டக்கல்வி அதிகாரியாக நியமனம் பெற்று வருகை தந்தருக்கும் திருமதி ராதிகா திரவியராஜா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் 08.04.2016 காலையில் கல்லூரி முதல்வர் பிறையினர் செலர் தலைமையில் சிசிலியா மேரி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்முனை தமிழ் கோட்டக்கல்வி பிரிவிற்கு பொறுப்பாக புதிதாக நியமனம் பெற்று வந்த ராதிகா திரவியராஜா பிரதம அதிதியாகவும் மற்றும் வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ரீசா பத்திரன, கல்லூரியின் பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவர் இங்கு தொடரந்து உரையாற்றுகையில்..
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அம்பாறை மாவட்டம் 67.50 வீதத்தினை பெற்று முதலாவது இடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் 64.07 சதவீதத்தினை பெற்று இரண்டாவது இடத்தினையும், திருகோணமலை மாவட்டம் 56.59 சதவீதத்தினை பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் 25 மாவட்டங்களில் 12வது இடத்தினை பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வலயத்தில் உள்ள எமது பாடசாலையே முழு வீச்சாக செயற்பட்டிருப்பது போற்றப்படவேண்டியதொன்றாகும்.
எதிர்வரும் காலங்களிலும் எமது பாடசாலையானது தேசிய மட்ட பரீட்சை பெறுபேறுகளில் உயர்ந்த இடத்தினை பெற்றுக்கொள்வதற்கு எமது ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்து செயற்படுவார்கள் மட்டக்களப்பில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் 25 மாணவர்கள் ஒன்பது பாடங்கிலும் 9ஏ தரச்சித்திகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றார்கள் அந்தச்சாதனைகளை எதிர்வரும் காலங்களிலும் எமது பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு அயராது உழைக்கும் அதற்கமையவே நாங்கள் ஐந்தாண்டு திட்டத்தினை முன்வைத்து கற்பித்தல் நடவடிக்கையினை முன்னகர்த்தி வருகின்றோம்.
சென்ற ஆண்டை விட இவ்வாண்டு சாதாரணதரப்பரீட்சையில் உயர் நிலை அடைந்திருக்கின்றது எதிர்காலத்தில் இதனை விட அனைத்து தேசிய மட்ட பரீட்சைகளிலும் உயர் நிலையை அடையவேண்டும் என்பதற்காக எமது கல்விச்சமூகம் அயராது பாடுபடும் எனவும் கூறினார்.






