பாறுக் ஷிஹான்-
யாழ். மாநகர சபையில் சுகாதார பிரிவுவில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி ஒட்டுமொத்தமாக (03-03-2016) இன்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இவர்கள் விடயத்தில் தெரியவருவது ....
கடந்த ஆறு ஏழு வருடங்களாக சுகாதார பிரிவில் தற்காலிய தொழிலாளர்களாக வேலை செய்து வருவதாகவும் தமக்கு நிரந்தர நியமனம் பெற்று தருவதாக கூறிய அனேக ஆணையாளர்களால் தாம் ஏமாற்றப்பட்டும் தமது விடயத்தில் அக்கறையற்றவராக இருக்கின்றார்கள் எனவும் யாழ் மாநாகர சபைக்குள் என்ன தற்போது நடைபெற்றுவருகின்றது என்பதும் தமக்கு புரியவில்லை தமது குடும்பங்கள் இந்ததொழிலை நம்பித்தான் வாழ்ந்துவருவதாகவும் அடிக்கடி வேலையால் நிறுத்துவதால் தமது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியிருந்தனர்.
தமது குடும்பங்களின் நிலைமைகளை புரிந்து கொண்டு உரிய அதிகாரிகள் தமக்கு விடயத்தில் மேல் அதிகாரிகளுக்கு கொண்டு சென்று எப்படியாவது பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நிரந்தர நியமனம் கிடைக்கும் பட்சத்தில் வேலை நிறுத்தத்தை கைவிடுவோம் என வேலை நிறுத்ததில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.


