காரைதீவு நிருபர் சகா-
அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புப்படையின் நிதிஒதுக்கீட்டின்கீழ் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நிருமாணிக்கப்படவுள்ள இருமாடிக்கட்டடத்திற்கான அடிக்கல் நடும் விழா நேற்று புதன்கிழமை அதிபர் எ.சி.எம்.எ.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
அம்காறை மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் சகிதம் அமெரிக்க பிரதிநிதிகளான லெவி எம் பைல் மேஹைல் மக்மிலன் வூட்லெவி ஹம்மன்ட் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் அடிக்கல் நடுவதையும் பொன்னாடைபோர்த்தி பாராட்டப்படுவதையும் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்வியலாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைச்சமுகம் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.






