இலங்கைக்கு மற்றுமொரு கூகுள் பலூன்...!

ற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில், முன்னதாக பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட பலூன் புசல்லாவ - களுகல்லவத்தை பகுதியில் நேற்றிரவு வீழ்ந்துள்ளது. 

குறித்த பலூன் மற்றும் இணைய கருவிகள் புப்புரெஸ்ஸ காவல்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். 

சீரற்ற காலநிலை மற்றும் பலூனின் பயணப் பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக இவ்வாறு இணைய கருவிகளுடன் பலூன் தரையில் வீழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

´புரோஜெக்ட் லூன்´ எனப்படும் கூகுளின் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனை கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -