முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
நிந்தவூர்-9ம் பிரிவில் திருமணம் முடித்த மாத்தளையை பிறப்பிடமாக கொண்டு 30 வயதான இளம் குடும்பஸ்தர் "சுஹார்த்தீன் முஹம்மட் அக்றம். என்பவர் இன்று 2016-02-22 நல்லிரவு 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்த நபர் அவரது சொந்தவூரான மாத்தளையில் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பனான இவர் இரண்டாவது முறையாக நிந்தவூர்-9 பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் திருமணமாகி கணவரால் கைவிடுபட்ட பெண்ணொருவரை திருமணம் முடித்து இரண்டு மாத காலங்கள் வாழ்ந்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பொற்றுள்ளது.
இது தொடர்பாக சம்மாந்துறை பதில் நீதவான் எ.எச். அருஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உடலை பாரேதப் பரிசோதனை செய்யுமாறு சம்மாந்துறை பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
