வெளிவிவகார அமைச்சின் முன்னாள் காண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பல வருடங்கள் வைத்திருந்த யானை ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.
இந்த யானை கடந்த 15 வருடங்களாக அம்பலாங்கொட, ஹிரேவத்த விகாரையில், யானை பாகன் ஒருவரை கொண்டு சஜின் வாஸ் குணவர்தன பாராமரித்து வந்துள்ளார்.
எனினும் இன்று அங்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், யானை லொறி ஒன்றில் ஏற்றி, எடுத்துச் சென்று அதனை உடவலவ யானை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, யானை வளர்க்க அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதால், அதனை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
