வடமாகாண புதிய ஆளுநராக வந்திருக்கும் ரெஜினோல்ட் குரே யாழ் முஹம்மதியா பள்ளிவாசலுக்கு சென்று பிராத்தனை செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (19) அன்று குறித்த பள்ளிவாசலுக்கு மாலை 4 மணியளவில் விஜயம் செய்தார்.
புதிய ஆளுநரை பள்ளிவாசலின் பேஷ் இமாம் மஹ்மூத் பலாஹி நறுமணம் பூசி வரவேற்றார். தொடர்ந்து பள்ளிவாசல் உள் மண்டபத்திற்கு சென்று ஆளுநர் ஆசி பெற்றதுடன் துஆ பிராத்தனையிலும் பங்குபற்றினார்.
அடுத்து வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அய்யூப் கேட்டுக்கொண்டதற்கிணங்க யாழ் மக்களுடன் சிறிய சந்திப்பிலும் கலந்து கொண்டார். மேலும் ஆளுநராக கடமையேற்றவுடன் ரெஜினோல்ட் குரே சர்வமத பிராத்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.






