க.கிஷாந்தன்-
அட்டன், வட்டவளை பகுதியில் ஒரு வீடு 24.02.2016 அன்று விடியற்காலை முதல் திடீர் தாழ் இறங்கி வருவதால் அந்த வீட்டில் இருந்த 10 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டவளை நகர பகுதியில் இந்த வீடு 01 அடி அகலத்தில் திடீரென நிலம் தாழ் இறங்கியுள்ளது.
இதனால் அருகிலுள்ள வீடுகள் மண்ணில் புதையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த வீட்டிலிருந்த 3 குடும்பங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இடர் முகாமைத்துவ மைய அதிகாரிகளும் நிலச்சரிதவியல் அதிகாரிகளும் இது தொடர்பாக அறிவித்துள்ளதாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடுகம மேலும் தெரிவித்தார்.