தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் நிகழ்வு..!

எம்.வை.அமீர்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்மொழிவுடன் இம்மாதம் 25 ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை விளையாட்டு உடல்நல மேம்பாட்டு தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

குறித்த உடற்பயிற்சி வாரத்தில் 26 ஆம் திகதி பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் தினமாக பிரகடனப்படுத்தப் பட்டிருந்ததால், தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சி நிகழ்வுகள் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் அப்பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் இடம்பெற்றது.

அல் ஜலால் வித்தியாலய உடற்பயிற்சி ஆசிரியர்களான ரீ.கே.எம்.சிராஜ், ஏ.சியாம் மற்றும் பல்கீஸ் ஜலீல் ஆகியோரது வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.சம்சுதீன் உட்பட ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -