பிள்ளையான் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ளகிறார்...


மூத்த போராளி-

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று இடம்பெறும் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் வருகை தந்துள்ளார்.

இன்றைய அமர்வில் பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் வழிநடாத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் நாளை ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெறும் "கிழக்கில் முதலீடு 2016" நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் ஏற்பாடுகளை நேரடியாக மேற்பார்வை செய்யும் பொருட்டு இன்றைய சபை அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -