பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் ஹைரிய்யாவின் (ஜஸ்கா) ஏற்பாட்டில் பாலமுனையில் எதிர்வரும் 30 ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.
இவ் வைத்திய முகாமில்;
01. 100 நோயாளிகளுக்கு கண்வில்லை மாற்று சத்திர சிகிச்சை
02. 150 நோயாளிகளுக்கு மருத்துவ கண்ணாடி வழங்குதல்
03. 350 நோயாளிகளுக்கு வாசிப்புக் கண்ணாடி வழங்குதல்
04. 200 சாதாரண நோயாளிகளுக்கு சாதாரண கண் சிகிச்சை வழங்குதல்.
05. 600 நோயாளிகளுக்கு பொது வைத்திய நிபுணர்களின் சிகிச்சை
06. 300 சிறுபிள்ளைகளுக்கு சிறு பிள்ளை வைத்திய நிபுணர்களின் சிகிச்சை
07. 200 நோயாளிகளுக்கு காது மூக்கு தொண்ைட வைத்திய நிபுணரின் சிகிச்சை
08. 100 நோயாளிகளுக்கு தோல் வைத்திய நிபுணரின் சிகிச்சை என்பன இவ்வைத்திய முகாமில் வழங்கப்ப்பவுள்ளன
அத்தோடு பிரபலமான வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மாத்திரமன்றி கண்ணாடிகளும் மருந்துகளும் கூட முழுமையாக இலவசமாக வழங்கிவைக்கப்படவுள்ளது.
இவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெற்று பயனடைய விரும்புபவர்கள் முற்கூட்டியே தங்களைப் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.
முற்பதிவுசெய்துகொள்பவர்களுக்கு மாத்திரமே குறித்த வைத்திய முகாமில் சிகிச்சை வழங்கபடும் என்பதோடு, பதிவுசெய்துகொள்ள விரும்பும் நோயாளிகள் முன்கூட்டியே 0770085105, 0754151077 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொபர்புகொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
