மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி -1 மற்றும் மாவடிவேம்பு ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி உள் நுளைந்த ஒரு குழுவினர் அங்கு அமைத்துள்ள குடிசைகள் பலவற்றை உடைத்து நாசமாக்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, குடியிப்புக்களில் உள்ள பயிர்களையும் வெட்டி பிடிங்கி எறிந்ததுடன் வேலிகளையும் பிடிங்கி எறிந்துள்ள சம்பவமொன்று நேற்று முந்தினம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
குறித்த பகுதி தனக்கு சொந்தமானது என்று உள் நுளைந்த ஒரு குழுவினர் குறித்த பகுதியில் குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும்,
வெளியேறாவிட்டால் குடிசைகளை எரிப்போம் எனவும், குறித்த பகுதிகளில் குடிசைகளை அமைத்துக் கொண்ட மக்களை அச்சுறுத்தி மிரட்யுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.