நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைதாவார்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட கூடும் என தெரியவருகிறது.

நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கு தேவையான சாட்சியங்கள் தேவைக்கு மேலதிகமாக தயாராக இருப்பதாகவும் இதனை அரசியல் பிரச்சினையாக காட்டி அரசியல் இலாபம் பெற மகிந்த தரப்பினருக்கு இடமளிக்காத வகையில் பொலிஸார் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

நாமல் ராஜபக்ஸ எந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட போகிறார், அவருக்கு எதிராக இருக்கும் சாட்சியங்கள் என்ன என அனைத்து தகவல்களும் தம்மிடம் இருப்பதாகவும் விசாரணைகளுக்கு தடையேற்படும் என்பதால், அவற்றை தற்போது வெளியிடப் போவதில்லை எனவும் சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -