அனைத்து பேக்கரி தயாரிப்புக்களும் 5 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரவு செலவு திட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையின் காரணமாகவே, விலையை அதிகரித்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கதின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள், நுகர்வோர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபடவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எந்த விதமான அறிக்கைகளும் வழங்காமல் விலை அதிகரித்துள்ளமை காரணமாக, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பேக்கரி உரிமையாளர்கள், பாரிய வீழ்ச்சியினை எதிர் நோக்குவதாக, சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
