சுலைமான் றாபி-
அம்பாறை மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (25)சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் போது இலங்கை தனியார் வைத்திய கல்லூரிகளின் கல்வித்தர பிரச்சினை , 2016 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்களுக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வைத்திய தேவைகள் பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை இவ்விடயம் சம்மந்தமாக எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் அல்லது பாராளுமன்ற அமர்வில் பேசி தீர்வு பெற்று தருவதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமினால் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.