மஹிந்த அணியிலிருந்து ஆளுங்கட்சிக்கு தாவும் சமல் ராஜபக்ஷ..?

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்னும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக ஆளுங்கட்சி வரிசைக்கு அணி மாறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் சில நாட்களுக்குள் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர் அவர் மஹிந்த ஆதரவு அணியிலிருந்து முற்றாக விலகி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படவுள்ளார்.

தற்போதைய நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தற்போது எதிரணியில் இருக்கும் கீதா குமாரசிங்க, பவித்திரா வன்னியாரச்சி, மனூஷ நாணயக்கார ஆகியோரும் புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -