சிகிரியா ஓவியங்களை புகைப்படம் எடுப்பதற்கு இன்று (30) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
சிகிரியாவின் சுவர் ஓவியங்கள் தொடர்பான இத்தீர்மானத்திற்கு, தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கிறிஷாந்த குணவர்தன தெரிவித்தார்.
கமெராக்கள் மூலம் புகைப்படம் எடுக்கும்போது கமெராவின் அதீத ஒளி காரணமாக ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் அளவில் சிகிரியா சுவர் ஓவியத்துடன் தொடர்பான, அதன் பின்புல பூச்சு கொண்ட பகுதி ஒன்று உடைந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
