கல்முனை மாநகர சபையில் மசூர் மௌலானாவுக்கு அனுதாபப் பிரேரணை..!

செயிட் ஆஷிப்-
ல்முனை மாநகர சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை வியாழக்கிழமை (2015-12-31) சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் முன்னாள் முதல்வர் மர்ஹூம் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவுக்கான அனுதாபப் பிரேரணையும் நிறைவேற்றப்படவுள்ளது.

மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நாளை 2.30 மணி தொடக்கம் மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போதே முதல்வரினால் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவுக்கான அனுதாபப் பிரேரணையும் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளது.

அத்துடன் சில வீதிகளுக்கு பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பிரேரணைகளும் இந்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -