வரவு செலவு திட்டத்தில் அரச வங்கிகளுக்கு அநீதிகள் ஏற்பட்டுள்ளதாக கோரி அட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்..!

க.கிஷாந்தன்-
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அரச வங்கிகளுக்கு அநீதிகள் ஏற்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியின் சேவையாளர்கள் 09.12.2015 இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியலாம் அட்டன் நகரில் மக்கள் வங்கிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வரவு செலவு திட்டத்தில் அரச வங்கி சேவையாளர்களுக்கு ஊழியர் சேமநல நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வுநிதியம் என முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு இந்த வரவு செலவு திட்டத்தில் சேவையாளர்களுக்கு எவ்வித சலுகைகள் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரச வங்கி சேவையாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -