தெமட்டகொட பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து ஹிருணிகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சட்டமாக அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவரது ஆலோசனைப் படி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைதுசெய்யப்பட்ட அறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
