பொதுச் சேவைத் துறையில் மிளிரும் இரு சாதனையாளர்கள் பிரதேச செயலகத்தினால் கௌரவிப்பட்டனர்..!

எம்.எச்.எம்.அன்வர்-
காத்தான்குடியை சேர்ந்த தற்போது அரச பொதுச் சேவைத் துறையில் மிளிரும் இரு சாதனையாளர்கள் பிரதேச செயலகத்தினால் கௌரவிப்பட்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியை பிறப்பிடமாகக்கொண்ட தற்போது அரச பொதுச் சேவைத்துறையில் மிளிரும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எம் ஐ எம் றபீக் ளடயள மற்றும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பி எம் அம்ஸா ளடகள ஆகியோர் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி இருவருக்கும் ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் கவிமணி மௌலவி எம் எச் எம் புஹாரி பலாஹி பொன்னாடை போற்றி கௌரவித்ததுடன் இவர்கள் வாழ்க்கை தொடர்பான வரலாற்றினை ஓய்வுபெற்ற அதிபர் எம் ஐ எம் இஸ்மாயில் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு எல் எம் என் முபீன் தொகுத்து வழங்கினர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ சி அப்கர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம் ஐ எம் சுபைர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் எம் எம் எம் அப்துர் ரஹ்மான் சட்டத்தரணி எம் உவைஸ் சட்டத்தரணி எம் ஐ எம் ஹக்கீம் சமுர்த்தி முகாமையாளர்கள் கிராம சேவை அதிகாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டனர் 
மேற்படி நிகழ்வின்போது சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் 200 வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டதுடன் மேற்படி பாதணிகளை அதிதிகள் வழங்கி வைத்தனர் அத்துடன் கலை நிகழ்வுகள் பாடல்களும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -