ஏனைய மதத்தினரையும் நாங்கள் மதிக்கக் கூடியவர்கள் - ACMYC இஸ்லாமிய அமைப்பு

சலீம் றமீஸ்-

சிறந்த ஆத்மீக உணர்வுள்ள ஒரு சமூகத்தை இளைஞர்கள் ஊடாக உருவாக்குவதுடன், ஏனைய சமூகங்கள் மத்தியில் எமது கலாசாரத்தின் முன்மாதிரியை பிரதிபலிக்கச் செய்வதுமே அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் செயல்பாடாகும் என இந்த ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் கல்வி கல்வி கற்பதற்காக பாடசாலைக்குச் செல்லும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையின் ஸாலிஹா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்;

எங்களது இந்த All Ceylon Muslim Youth Community என்ற அமைப்பானது உலமாக்களினதும், புத்திஜீவிகளினதும் வழிகாட்டலின் கீழ் 2012.12.20ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

எமது இந்த அமைப்பில் இலங்கையின் பல பிரதேசங்களிலும் உள்ள பல உலமாக்கள், கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள்,புத்திஜீவிகள் என்று 100க்கும் அதிகமான வாலிபர்கள் உறுப்பினர்களாக இதுவரை உள்ளனர். 

அன்றைய காலகட்டத்தில் எமது அமைப்பினுடைய நோக்கமாக ஒரு சிறந்த ஆத்மீக உணர்வுள்ள ஒரு சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக எமது அமைப்பு பல ஊர்களில் தெரிவு செய்யப்பட்ட மஸ்ஜிதுகளில் சிறந்த உலமாக்களைக் கொண்டு பல நிகழ்ச்சிகளை நடாத்திவந்தோம். இன்றும் இந் நிகழ்ச்சிகளை நடாத்திவருகின்றோம்.

உலமாக்கினால் நிகழ்த்தப்படும் மார்க்க உபன்னியாசங்களை எமது நாடு, வெளிநாடுகளிலும் உள்ள ஏனையவர்களும் கேட்க வேண்டும், அவர்களுடைய செயற்பாடுகளும் ஆத்மீகம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் எமது அமைப்பு www.ACMYC.com என்ற பெயரில் இணையதள முகவரியை உருவாக்கி  இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இடம் பெறும் மார்க்க உபன்னியாசங்களை எமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தோம். இதனால் வெளிநாடுகளில் நிகழ்த்தப்படும் மார்க்க உபன்னியாசங்களை இலங்கையில் உள்ளவர்களும், இலங்கையில் இடம் பெறும் மார்க்க உபன்னியாசங்களை வெளிநாடுகளில் உள்ளவர்களும் கேட்க கூடிய முறையில் எமது அமைப்பினுடைய அடுத்த நோக்கத்தினை அல்லாஹ்வின் உதவியால் நடைமுறைப்படுத்தினோம்.

எமது அமைப்பினுடைய மற்றுமொரு நோக்கம்தான் வறிய மாணவர்கள் தங்களின் கல்வியை வறுமை என்ற காரணத்தினால் தங்களின் கல்வியை இடை நிறுத்தக் கூடாது. அவர்கள் தொடர்ந்தும் கல்வியை கற்க நாம் சிறிய ஒரு உதவியாவது செய்ய வேண்டும் என்பதாகும்.

இந் நோக்கத்தினை எமது அமைப்பு ஏற்படுத்துவதற்கான காரணம் என்னவெனில்...

கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகெழும்பு, ஒரு சமூகத்தின் எழுச்சி, வளர்ச்சி, சிந்தனாரீதியான மாற்றம் ஆகியவைகளை கல்வியினால்தான் மாற்ற முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எந்த சமூகத்தினுடைய கல்விக்கு பின்னால் ஆத்மீகமும், எந்த சமூகத்தினுடைய ஆத்மீகத்திற்கு பின்னால் கல்வியும் இருக்குமோ அந்த சமூகம் தலை நிமிர்ந்து வாழ்ந்துள்ளது என்பதை வரலாறுகள் எமக்கு சான்று கூறுகிறது.

ஒரு சமூகத்தினுடைய ஆத்மீகத்தை பாதுகாப்பது அச் சமூகத்தினுடைய பாரிய ஒரு பொறுப்போ, அது போல ஒரு சமூகத்தினுடைய கல்வியையும், கல்வியில் எழுச்சியையும் ஏற்படுத்த பாடுபடுவதும் ஒரு சமூகத்தினுடைய பொறுப்பாகும்.

அந்த வகையில் எமது இந்த திட்டம் மத, இன வேறுபாடுகளின்றி மனிதநேயம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது நாட்டினை பொறுத்தவரை பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடாகும். ஆகவே ஏனைய சமூகத்தினைரையும் இணைத்துக் கொண்டு எங்களினுடைய இவ்வாரான செயற்பாடுகள் அமைய வேண்டும், நாங்கள் ஏனைய மதத்தவர்களை வெறுப்பவர்கள் அல்ல அவர்களையும் அரவனைத்துக் கொண்டு செல்லக் கூடியவர்கள் என்ற தொணிப்பொருளில் இத்திட்டம் அமைய வேண்டும் என்பதில் எமது அமைப்பினுடைய உறுப்பினர்கள் உறுதியாக இருந்தார்கள்...

எமது இந் நோக்கத்தினை நடைமுறைப்படுத்த சுமார் 03 வருட காலம் பயணிக்க வேண்டியிருந்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்த வருடம் அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது...

2016ம் ஆண்டில் முதல் கட்ட நடவடிக்கையாக கல்வி கற்றுக் கொண்டிருக்கும் வறுமையான மாணவர்கள் 2016ம் ஆண்டு பாடசாலைக்கு செல்லும் போது அவர்களும் புதிய பாடசாலை உபகரணங்களோடு, மண மகிழ்ச்சியோடு, சிரித்தவர்களாக பாடசாலைக்கு செல்ல வேண்டும். என்ற நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணப் பொதிகள் எமது அமைப்பினால் வழங்க வேண்டும் என தீர்மானித்தோம்.

அந்த வகையில் இதுவரை எமக்கு கிடைத்திருக்கும் உதவிகளைக் கொண்டு ஆரம்ப கட்டமாக 100 மாணவர்களுக்கு இப்போது பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கவுள்ளோம். இன்ஷா அல்லாஹ் ஏனைய மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இத்திட்டத்திற்கு கிடைக்கும் உதவியை வைத்து ஏணைய மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். இத்திட்டம் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வருடமும் நடாத்துவதற்கான உதவிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

பலருடைய தனிப்பட்ட நிதி உதவி, பொருள் உதவி, உடல் பலம், பிரார்த்தனை போன்ற உதவியுனூடாகவே இத்திட்டத்தினை எங்களால் இவ்வருடம் நடைமுறைப்படுத்த முடிந்தது. அப்படி யாரெல்லாம் இத்திட்டத்திற்கு உதவி செய்தார்களோ அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

இவ்வாரான நிகழ்ச்சித்திட்டங்கள் செய்வது எம் ஒவ்வொரு சமூகத்தினரதும் கடமையாகும். வாருங்கள் , கைகோர்த்து கொள்வோம். இது நாம் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு பொறுப்பாகும்.  ஏனைய மதத்தினரையும் நாங்கள் மதிக்கக் கூடியவர்கள் என்பதனை நாவினால் சொல்லாமல் செயலினால் செய்து காட்டுவோம். அதற்கான சந்தர்ப்பந்தை அல்லாஹ் நமக்கு வழங்க வேண்டும். எமது இந்த செயற்பாட்டை இஹ்லாசுடன் அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்ததாக அல்லாஹ் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் மற்றும் மதத் தலைவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், முஸ்லிம், தமிழ், சிங்கள, கிறிஸ்தவ பாடசாலைகளை சேர்ந்த 100 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -