திருகோணமலை மூதூரில் 14டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில்..!

எப்.முபாரக்-
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 14 பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக பெய்த அடைமழை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளபோதிலும், கொழும்பு போன்ற நகரங்களுக்கு சென்று வந்தவர்களே டெங்கு காய்ச்சலின் தாக்கத்துக்கு பெரும்பாலும் ஆளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், ஆனைச்சேனை, மல்லிகைத்தீவு, முன்னம்பொடிவெட்டை, கிளிவெட்டி, இருதயபுரம், பூநகர் மற்றும் பாலநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடத்தில் மாத்திரம் மூதூர் பிரதேச கிராமங்களில் 147 டெங்கு நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -