திருகோணமலையில் கிளிவெட்டியில் கொள்ளையிட்ட இருவர் கைது..!

எப்.முபாரக்-
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி, தங்கபுரம் பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் திங்கட்கிழமை (28) இரவு உட்புகுந்து தங்க நகைகள், பணம் போன்றவற்றை திருடிய 18 மற்றும் 20 ஆகிய வயது இளைஞர்கள் இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டபோதே, இவ்விரு இளைஞர்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் நாளை புதன்கிழமை (30) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -