ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடும் நிகழ்வு தற்பொழுது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருந்த இந்திய மார்க்க சொற்பொழிவாளர் பி ஜெனுலாப்தீன் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு தடை விதித்திருந்தால் அவர் இன்று இலங்கை வரவில்லை என தெரியவருகின்றது.
இதேவேளை, பி ஜெனுலாப்தீனுக்கு நிகழ்ச்சி நிரலில் வழங்கப்பட்ட தலைப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேரடியாக(ஒன்லைன்) உரையாற்றுவார் என ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.






