முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
நிந்தவூர் 5ம் பிரிவுகுள்ளான இரண்டாம் குறுக்கு வீதியானது மக்களால் அன்றாடம் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான வீதியாகும். தற்போது இவ்வீதி புணரமைக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டன.
ஆனால் இவ்வீதியை புணரமைத்த கொந்தராத்காரர்களின் கைவரிசை என்னமோ அவ்வீதியில் நான்காம் சந்தியில் 15 அடி அகலத்தில் இவ்வீதியை முற்று முழுதாக போடாமல் விட்டதனால் தற்போது இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக இவ்வீதியில் அவ்விடத்தில் நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கின்றது. இது கொந்தராத்காரர்களுக்கு காட்சியாக இருப்பினும் மக்களுக்கு போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவுள்ளது.
மேலும் இவ்வீதியினுடாக மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த சிலர் அவ்விடத்தில் தேங்கி நிற்கும் நீரின் ஆழம் அறியாமல் விபத்துக்குள்ளானதில் கை,கால் உடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பிரதேச மக்கள் இவ்வீதியை புணரமைத்த கொந்தராத்காரர்கள்மேல் கடும் வெறுப்புணர்ச்சியோடு றோடு போடுவெதென்றால் ஒழுங்கான முறையில் போடவேண்டும் இல்லையெனில் றோடு வேண்டாமென கூறுகின்றனர். இதனை சமுக நலன்பற்றுள்ள மனிதனாகயிருந்து பார்க்கும்போது பாதிக்கப்பட்ட மக்கள் வெறுப்புணர்ச்சியோடு கூறுவது நியாயமாகத்தான் தோன்றுகிறது.
மேலும் இவ்வீதியின் அவலம் தொடர்பாக பலதரப்புக்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்தபோது இதனை அலசி ஆராய்ந்தபோது சில தகவல்கள் வெளிவந்துள்ளன அதாவது தற்போது இவ்வீதியில் குளம்போன்று காட்சிதருகின்ற அந்த 10 அடிக்கு அப்பாலுள்ள தெற்கு வீதி பகுதி ஒரு கொந்தராத்காரருக்கும் வடக்கு வீதி பகுதி வேறு கொந்தராத்காரருக்கு கொடுத்ததனால் குளம்போன்று கட்சிதருகின்ற அந்த 10 அடி நான்காம் சந்தியை யார் போடுவதென்ற இழுபறியில் யானை போய் விட்டது வால் பொறுத்துவிட்டதென்ற நிலையில் கிடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
உண்மையில் இதுவொரு அநியாயத்துக்காக கொடுக்கப்பட்ட கொந்தராத் என்றுதான் சொல்லமுடியும் காரணம் இதுவொரு திட்டமிடலின்றி கொடுக்கப்பட்ட வேலைத்திட்டமாகும்.
ஆகையால் இவ்வீதி தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு இவ்வீதியின் அவலத்தினை சீர் செய்து தருமாறு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேம்.





