மர்ஹூம் நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த உரை கொழும்பில்..!

கொழும்பு நிருபர்,ஏ.எஸ்.எம்.இர்ஷாத் -
பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட பழைய மாணவர் அமைப்பான றாபியத்துன் நளிமியீன் மத்தியகுழு ஒழுங்கு செய்துள்ள மர்ஹூம் நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த உரை ஆறாவது தடவையாக கொழும்பு-7 குதிரை பந்தயத்திடல் விளையாட்டுதுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக சிங்கள மொழிப் பிரிவு தலைவர் பேராசிரியர் சரத் விஜயசூரிய பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு 'தேசிய ஐக்கியத்திற்கான நல்லிணக்கம்' எனும் தொனிப் பொருளில் ஞாபகார்த்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -