பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட பழைய மாணவர் அமைப்பான றாபியத்துன் நளிமியீன் மத்தியகுழு ஒழுங்கு செய்துள்ள மர்ஹூம் நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த உரை ஆறாவது தடவையாக கொழும்பு-7 குதிரை பந்தயத்திடல் விளையாட்டுதுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக சிங்கள மொழிப் பிரிவு தலைவர் பேராசிரியர் சரத் விஜயசூரிய பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு 'தேசிய ஐக்கியத்திற்கான நல்லிணக்கம்' எனும் தொனிப் பொருளில் ஞாபகார்த்த உரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.