கட்டார் வாழ் இலங்கை சகோதர்களை அழைக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர்...!

கட்டார் வாழ்,முஸ்லிம் காங்கிரசின் எனது உறவுகளுக்கு ! அஸ்ஸலாமு அலைக்கும்.

கட்டார் நாட்டிற்கு முதல் தடவையாக வருகை தந்துள்ள நான்,உங்களில் ஒரு சிலரை மாத்திரம் சந்திக்க கிடைத்தது.அல்ஹம்துலில்லாஹ்.உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டுமென நான் பெரிதும் ஆசைப்பட்டபோதும், அது போல் உங்களில் பலர் விரும்பியபோதும், அது கடந்த 3 நாட்களுக்குள் சாத்தியப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எ.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வருடக்கணக்காக உறவுகளைப் பிரிந்து இத்தேசத்தில் உழைத்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் சந்தித்து சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள,சாத்தியமான ஏற்பாடொண்றை எனது நண்பர்கள் சிலர் மேற்கொண்டுள்ளனர்.அதன்படி இன்ஷாஹ் அல்லாஹ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை(2015/11/13 ஆம் திகதியன்று),அஷர் தொழுகைக்கு,பர்வா விலேஜிலுள்ள மையவாடிப் பள்ளி வாசலில் உங்களை எதிர்பார்க்கிறேன்.

உங்களுக்கு சிரம ம் இல்லையென்றால் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எம்.ஐ.எம்.மன்சூர்.பா.உ,
திகாமடுள்ள மாவட்டம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -