ஆலையடிவேம்புக்கு அதிரடியாக களமிறங்கிய பிரதியமைச்சர் ஹரீஸ் - மைதான பிரச்சினைக்கு தீர்வு

செய்தியாளர்- எஸ்.எம்.அறூஸ்-
ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று காலை களவிஜயத்தை மேற்கொண்டார்.

பிரதி அமைச்சருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே.ரொபின் கோடிஸவரன், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருவன் சந்திர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் கொடமுன, பிரதம பொறியியலாளர் ரணசிங்க மற்றும் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் இக்களவிஜயத்தில் இணைந்து கொண்டனர்.

விளையாட்டு கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது.

இந்தக்குறைபாடுகளை கண்டறிந்து கொண்ட பிரதி அமைச்சரும்,அமைச்சின் அதிகாரிகளும் இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக இங்கு தெரிவித்தனர்.

அம்பாரை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக தமிழ்,முஸ்லிம் பிரதேசங்களின் உள்ள விளையாட்டு மைதானங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -