அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தும் இரண்டு கைக்குண்டுகள், மற்றும் கைத்துக்கியையும் தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடுழிய சிறைதண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை (26) திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை சிறுப்பிட்டி,சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்மி சோமசுந்தரம் வயது(51)என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் அனுமதியின்றி இரண்டு கைக்குண்டுகள்,மற்றும் கைத்துப்பாக்கியையும் தம் வசம் வைத்திருந்த நிலையில் உப்புவெளி பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக வாழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு திருகோணமலை உயர்நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் சந்தேக நபரை குற்றவாளியாக இணங்கண்டு இருபது வருடம் கடுழிய சிறைதண்டனை விதித்து திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் தீர்ப்பளித்தார்.