திருகோணமலையில் கைக்குண்டுகள் வைத்திருந்தவருக்கு கடுழிய சிறைதண்டனை...!

எப்.முபாரக்- 

னுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தும் இரண்டு கைக்குண்டுகள், மற்றும் கைத்துக்கியையும் தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடுழிய சிறைதண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை (26) திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருகோணமலை சிறுப்பிட்டி,சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்மி சோமசுந்தரம் வயது(51)என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் அனுமதியின்றி இரண்டு கைக்குண்டுகள்,மற்றும் கைத்துப்பாக்கியையும் தம் வசம் வைத்திருந்த நிலையில் உப்புவெளி பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக வாழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு திருகோணமலை உயர்நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் சந்தேக நபரை குற்றவாளியாக இணங்கண்டு இருபது வருடம் கடுழிய சிறைதண்டனை விதித்து திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -