காதர்-
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடந்த 2002 முதல் இன்று வரை அனைத்து இன மக்களுக்காகவும் அயராது குரல் கொடுக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் வட மாகாண அபிவிருத்திக்குழு தலைவராக இருந்ததுடன் பல அபிவிருத்தித்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்திலும் 100 நாள் திட்டத்திலும் வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீண்டும் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் வட மாகாண அபிவிருத்திக்குழு தலைவராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.