ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் பங்கேற்றமைக்கான செலவாக 90 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்தக்கோரிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க விடுத்தார்.
இதனைதவிர அரசாங்க நிறுவனங்களுக்கான வாகன கொள்வனவுக்காக 1.3பில்லியன் ரூபாய்களுக்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைப்பிரிவுக்கு 18 மில்லியன் ரூபாய்களும் தேவை என்று நேற்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
