பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் வருடந்தோறும் வெளியிடப்படும் அல் இன்ஸிராஹ் நூல் இவ்வருடமும் வெகு விமர்சையாக வெளியிடப்படவுள்ளது.
அரை நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்நூலானது மாணவர்களினதும், விரிவுரையாளர்களினதும் புத்தாக்கங்களின் ஊடாக பல்கலைக்கழகம் மற்றும் வெளி சமூகங்களில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சினைகள் மற்றும் தெளிவின்மை போன்ற விடயங்களை தமது கருத்துக்கள், எண்ணங்கள் ஊடாக சமூகத்திற்கு எடுத்தியம்புவதுடன், இஸ்லாமிய கருத்துக்கள், சிந்தனைகள் ஊடாக தீர்வை வழங்குவதன் மூலம் பல்கலைக்கழக பல்லின சமூகத்திற்கு மத்தியில் புரிந்துணர்வுக்கான அத்திவாரமாக தொழிற்படுகின்றது.
பல்லின சமூக்த்தின் ஒற்றுமையை தனது கருப்பொருளாக தாங்கி வெளிவரும் இவ்வருட அல் இன்ஸிராவானது இதழாசிரியர் A.L.அல்தாப் ஹுஸைன் மற்றும் அவரது குழுவினரது அயராத முயற்சியினால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஆழனெயல (16.11.2015) அன்று கலைப்பீட அரங்கில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இவ்வரலாற்று நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கின்றார்கள்.
தகவல்-
இதழாசிரியர்,
அல்தாப் ஹுஸைன்.