நாளை இளைஞர் பாராளுமன்றத்தேர்தல் - அம்பாறையில் 05 ஆசனங்களைப்பெற 49 பேர் போட்டி

சுலைமான் றாபி-
நாளை (07.11.2015) இடம்பெறவுள்ள இலங்கையின் மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 49 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 04 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதோடு மீதமான உள்ள ஒரு ஆசனம் போனஸ் முறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

இதேவேளை இம்மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 18,920 பேர் தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் தொகுதிவாரியாக 
அம்பாறையில் : 4,735 பேரும், சம்மாந்துறையில் : 4,276 பேரும், கல்முனையில் 2,503 பேரும், பொத்துவிலில் 7,406 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் நாளை காலை 8.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை இடம்பெறவுள்ள இவ்வாக்களிப்பானது அந்தந்த பிரதேச செயலகங்களில் அமையபெற்றுள்ள வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, வாக்கெண்ணும் பணிகளும் குறிப்பிட்ட பிரதேச செயலாளரின் தலைமையின் கீழ் அப்பிரதேச செயலகத்திலே இடம்பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச். உமர்லெவ்வை தெரிவித்தார்.

இதேவேளை நாளை இடம்பெறவுள்ள 03வது இளைஞர் பாராளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதோடு 168 பேர் தேர்தல் மூலமும், 57 பேர் தகமை அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -