விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பாக சிங்கபூர் உயர் ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை!


ஹாசிப் யாஸீன்-
லங்கைக்கான சிங்கபூர் உயர்தானிகர் எஸ்.சந்தரதாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமானரவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்ஆகியோருக்கிடையேயான சந்திப்பு இன்று (06) மாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில்அமைந்துள்ள அமைச்சர் ஹக்கீமின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் விiளாயாட்டுத்துறை அபிவிருத்தி, குறிப்பாக வடக்கு, கிழக்குமாகாணங்களின் விளையாட்டு மைதானங்களின் நிலவரம், வீரர்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சர் ஹரீஸ் தூதுக் குழுவினருக்கு விபரித்ததுடன் இதனைநிவர்த்தி செய்ய தங்களது நாட்டின் உதவியினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கையும்விடுத்தாhர்.

மேலும் வீரர்களுக்கு விளையாட்டின் நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள், திறன்களை அபிவிருத்திசெய்தல் பற்றியும் ஆராயப்பட்டன. அத்துடன் 35 ஆயிரம் பார்வையாளர் கொண்ட சர்வதேசதரத்திலான கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைப்பது சம்பந்தமாக இதன்போது இணக்கம்எட்டப்பட்டது.

எதிர்காலத்தில் இவ்விடயம் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடல் ஒன்றினைவிளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினருடன் இருதரப்பினரும் மேற்கொள்வது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இசசந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸூம் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -