உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனம்..!

ள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்களை வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்வதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பொருட்டு எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதுகுறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிடுகின்றார்.

அந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னரே வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேக்கா நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதோடு, இறுதி அனுமதிக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அனுமதி கிடைத்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எண்ணியுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேக்கா மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -