க.கிஷாந்தன்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
16.09.2015 அன்று காலை 9 மணியளவில் மேற்படி தோட்ட தொழிலாளர்கள் அப்பகுதிக்கு தொழிலுக்காக செல்லும் போது இவ்வாறு சடலத்தை கண்டுள்ளனர்.
இச்சம்பவத்தை தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளின் போது குறித்த நபர் விஷம் அருந்தியுள்ளதாகவும் வட்டகொடை மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 61 வயதுடைய நாராயணன் ராமையா எனவும் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.