இன்று முதலாவது எதிர்ப்பை வெளியிட்டார் புதிய எதிர்க்கட்சித் தலைவர்..!

புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் இன்று தெரிவுசெய்யப்பட்டார். இந்த நிலையில் தனது முதலாவது எதிர்ப்பை அவர் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வெளியிட்டார்.

அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான விவாதம் தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில், இதில் உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -