புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் இன்று தெரிவுசெய்யப்பட்டார். இந்த நிலையில் தனது முதலாவது எதிர்ப்பை அவர் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வெளியிட்டார்.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதம் தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில், இதில் உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
