இன்று கட்டாரில் மதியம் 12 மணியளவில் பலத்த புழுதிக்காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்துள்ளது மிகவும் சூடான காலநிலையில் இருந்த கட்டாரில் திடீரென்று புழுதிக்காற்றுடன் மழை பெய்துள்ளது.
தொடற்சியாக ஒரு மணி நேரம் விடாது பெய்த மழையில் நடுவே ஐஸ் கட்டிகளும் கொட்டியுள்ளது வாகனங்களுக்கு எவ்வித பெரிய சேதங்களும் ஏற்பட வில்லை என்றாலும் செனயா போன்ற வீதிகளில் மழைத் தண்ணீர் நிறம்பி வழிகிறது.
நீண்ட நாட்களின் பின் ஐஸ் மழையைக் கண்ட மக்களும் தொழிலுக்காக கட்டார் சென்றுள்ள மக்களும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை ஆரவாரமிட்டு கொண்டாடியுள்ளார்கள்.
