ஒருநாள் போட்டித் தொடரின் வெற்றி அவுஸ்ரேலியா வசம்..!

ங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் வெற்றி அவுஸ்ரேலியா வசமானது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் இரண்டு அணிகளும் இரண்டுக்கு இரண்டு என்று சமநிலை வகித்த நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5வது போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, அந்த அணி 33 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்படி, இந்த போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றதுடன், தொடரையும், மூன்றுக்கு இரண்டு என்ற வகையில் கைப்பற்றியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -