ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க வேண்டிய அவசியம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் அறிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அரசு நிறுவனங்களில் முதல் ஆசனங்களை பெற்றுகொண்டிருந்த மஹிந்த தரப்பினர் பலரினால் முன்வைக்கப்பட்ட துயரங்கள் காரணமாக இச் சந்திப்பை மேற்கொள்ள முயற்சித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியற்ற நபர்களை அப்பதவிகளில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் இந் நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
