சவுதி அரேபியாவின் புனித மக்கா பள்ளிவாசலில் பாரம் தூக்கும் பாரிய கருவி ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்த பட்சம் 107 பேர் பலியாகினர்.
எனினும் காயமடைந்தோரில் இலங்கையர் எவரும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலிம் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புனித மக்காவின் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அதி உயரமான குறித்த பாரம் தூக்கும் கருவி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் உடைந்து வீழ்ந்துள்ளது.
