பதவியேற்ற கி.மா.ச. உறுப்பினர் மாஹிருக்கு சம்மாந்துறையில் அமோக வரவேற்பு..!

எம்.எம்.ஜபீர்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பதவியேற்ற ஐ.எல்.எம்.மாஹிர் தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு நேற்று இரவு விஜயம் மேற்கொண்ட போது பிரதேச மக்களினால் பட்டாசு கொழுத்தப்பட்டு மகத்தான வரவேற்பழிக்கப்பட்டது.

கல்முனை - அம்பாரை பிரதான வீதி வழியாக ஐ.எல்.எம்.மாஹிர் தனது ஆதரவாளர்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஹிஜ்ரா சந்தியை அடைந்து சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்மா பள்ளிவாசலிற்கு சென்று சம்மாந்துறை உலமா சபை தலைவர் மௌலவி அல்துல் காதர் தலைமையில் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

இதன்போது கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவீகள், இளைஞர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், போராளிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -