‘தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா’ ஹிருனிகாவிடம் மஹிந்த கேள்வி...!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கப் போவதில்லை.

மஹிந்த ராஜபக்சவின் பக்கத்தில் இனி எந்தக் காலத்திலும் நிற்கப் போவதில்லை.

2013 ஆம் ஆண்டில் மேல் மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டி கொலன்னாவ பிரதம அமைப்பாளர் பதவியை மஹிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தேன்.

இதன்போது, ‘தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா’ என மஹிந்த என்னிடம் கேள்வி எழுப்பினார்.

மஹிந்தவின் இந்தக் கேள்வி என்னை பெரிதும் அதிருப்தி அடையச் செய்தது. தந்தையை கொலை செய்த அடுத்த நாளே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன். எனினும் அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் அதனைத் தடுத்தனர் எனவும் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -