ரணில்,மைத்திரி,சந்திரிக்கா மூவரும் நேற்றிரவு சந்திப்பு...!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்தே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் நியமனம், பதவியேற்பு, மற்றும் அமைச்சுக்கள் ஒதுக்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் புதிய அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

45 பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பது என்றும், அதில் 30 பேர் ஐதேகவினரும், 15 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் இடம்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அமைச்சரவை பதவியேற்பு அடுத்தமாதம் 2ஆம் நாளே நடக்கவுள்ளது.

இந்த நிலையிலேயே இழுபறிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -