15 அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சி கோரிக்கை!

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு குறைந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் பிரதியமைச்சர் பதவிகள் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகள் என குறைந்தது 30 அமைச்சு பதவிகள் தமக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான பலருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேவேளை பிரதிப் பிரதமர் பதவி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

பிரதிப் பிரதமர் பதவியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -