தமிழக அகதிகளின் வாழ்வில் ரணில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்திருக்கின்றார் - இந்தியா

மிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருப்பதாக த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்து பத்திரிகையிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழக மண்டபம் அகதி முகாமில் வாழும் தமிழ் அகதிகள்,

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு தொடர்பில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய ஏராளம் விடயங்கள் உள்ளன.

அவை அனைத்தையும் ரணில் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. ஏனெனில் அவரும் ஒரு சிங்கள இனத்தவரே. எனினும் ராஜபக்சவின் தோல்வி எங்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை மலரச் செய்துள்ளது.

அத்துடன் தேர்தல் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இனப்பிரச்சினை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளும் ஓரளவுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

இருந்தாலும் தற்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது. நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அகதி முகாமில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -