பதவிகளுக்காக பொதுபல சேனாவுடனும் கூட்டுச்சேர தயாரகவிருக்கும் NFGG என்னும் கட்சியினர் இன்னும் மக்கள் முன் வெட்கமின்றி எந்த முகத்துடன் வாக்குப்பிச்சை கேட்பது என்றும் கேட்க விரும்புகிறேன்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கொண்டவர்கள், இன்று கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துள்ளனர்.
எனவே அடுத்த நடவடிக்கையாக கொழும்பு போன்ற பகுதிகளில் பொதுபல சேனாவுடனும் இணைந்து ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் நப்பாசையில் களமிறங்குவார்களே தவிர மக்கள் சிந்தனை, கொள்கை என்ற பேச்சுக்கே இவர்களிடம் இடமிருக்க வாய்ப்பிருக்காது.
பொய்யான கூற்றுக்களை மக்கள் முன்வைத்து பெரும் சவால்களைப் பேசி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒவ்வொரு மேடையிலும் வசைபாடிய இவர்கள் இன்று முழங்காலிட்டு போய் மண்டியிட்டு முக்காடு போட்டு இணைந்திருப்பது எந்தவகையில் நியாயம்.
இவர்கள் இணைந்தாலும் இணையாவிட்டாலும் கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே அதிகமான ஆதரவுனை வழங்குவது நாமறிந்த உண்மை. எனவே கொள்கைகள் பேசி மக்களை குழப்ப முயலும் இப்படியானவர்கள் இனிமேலும் தளைவிடாது பார்க்க வேண்டியது மக்களின் பொறுப்பு.
ஆகவே எது எவ்வாறாயினும் ஆசனம் கிடைத்தால் போதும் என்ற கேவலமான சிந்தனையை விட்டு சூறா சபை, அந்த சபை, இந்த சபை என்று மக்களை ஏமாற்றி இன்று எல்லாவற்றையும் கலைத்து விட்டு
தானே ராசா, தானே மந்திரி என்று வேறு கட்சிகளுடன் ஒப்பந்தம் பன்னும் அக்கட்சியின் நாயகன் தன்னிச்சையாக இயங்குவதும் பின்னால் மடையர்களாக மக்கள் கூட்டம் செல்வதும் மிகவும் கேவலமாக இருக்கிறது. எனவே இனியும் மக்கள் மந்தப்புத்தியுடன் இயங்கமாட்டார்கள் மக்கள் என்று நம்பி விடைபெறுகிறேன்.
